தமிழவை உங்களது இல்லத்தில் ஆரம்பித்தபோது அந்த வைபவத்தில் நேரில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தமை மகிழ்ச்சிக்குரியது.
தமிழவையின் முதல் தலைவராக இருந்த காலத்தில் நாடகங்கள், வில்லுப்பாட்டுக்கள் போன்ற பல இசை நிகழ்சிகளிலும் கலந்து கொண்டமையை பெருமைக்குரியதாகவே எண்ணுகிறேன்.
ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கு முன்னதாக வானொலியில் ஒலிபரப்பான “சந்ததிகள், வீட்டுக்கு வீடு” ஆகிய நாடகங்களை ஒலி நாடாவிலிருந்து நவீன ஒலிப்பதிவுக்கு மாற்றி உயிரோடைத் தமிழ் வானொலியில் சமீபத்தில் ஒலிபரப்பிய போது இன்றும்
அந்நாடகங்களில் வரும் நகைச்சுவைகள் சிந்தனைக்குரியதாகவும் இரசிக்கக்கூடியதாகவும் இருந்தது மிகவும் பாராட்டுக்குரியதே.
பல வருடங்களாக புது வருட தினத்தன்று உங்கள் வீட்டில் அத்தினத்தை இசைக்கச்சேரியுடன் உங்களது நடிப்புடனான பாடல்களை இரசித்து உணவருந்தி மகிழ்ந்த நாட்கள் பசுமையானவை.
நீங்கள் எங்களை இலண்டனில் சந்திப்பதற்கு பல வருடங்களுக்கு முன்னரே எங்கள் உறவினரான மறைந்த கலாபூசணம் அன்ரனி பாலதாஸ் அவர்களுடைய இசை நாடக நடிப்புத் திறமையால் ஈர்க்கப்பட்டிருந்ததாக கூறியிருந்தீர்கள். அதுவும் எமக்கு மகிழ்ச்சியே.
எமது நீண்ட கால நண்பரான உங்களது படைப்புக்கள், வெளியிட்ட புத்தகங்கள், கவிதைகள் வழியாக நமது தமிழ் சமூகத்திற்கு ஆற்றி வரும் அளப்பரிய சேவைக்கு எங்கள் வாழ்த்துக்களும் நன்றிகளும்.
அன்புடன்
ஜோ வில்சன் இருதயானந்தன்

